விவசாயிகள் மீது போலீசார் தடியடி: நீடாமங்கலத்தில் பதற்றம்
திருவாரூர்:
காவிரி டெல்டா பகுதிகளில் நேற்றைய முழு அடைப்பின் போது போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீதுபோலீசார் தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டுகளையும் வீசினர். இதையடுத்து அப்பகுதியில் பெரும் பதற்றம்ஏற்பட்டது.
காவிரியில் தமிழகத்திற்கு கர்நாடக அரசு நீர் திறந்துவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி காவிரி டெல்டா பகுதிவிவசாயிகள் நேற்று தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் முழு அடைப்புக்கு அழைப்புவிடுத்திருந்தனர்.
இதையடுத்து இந்த மூன்று மாவட்டங்களிலுமே நேற்று இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகில் உள்ள திருவாரூர்-தஞ்சாவூர் சாலையில் விவசாயிகள்அமர்ந்து கொண்டு சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாகப்பாதிக்கப்பட்டது.
இதையடுத்து அங்கு விரைந்து வந்த போலீசார், விவசாயிகளைக் கலைந்து செல்லுமாறு கூறினர். ஆனால்விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து அவர்களைக் கைது செய்ய போலீசார் முயற்சித்த போது, இரு தரப்பினருக்கும் இடையே கடும்வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் போலீசார் விவசாயிகளைக் கலைப்பதற்காகத் தடியடி நடத்தினர். இதில் சுமார் 50 விவசாயிகள்காயமடைந்தனர்.
போலீசாரின் இந்த நடவடிக்கையால் ஆத்திரமடைந்த விவசாயிகள் திடீரென்று போலீசார் மீது கல்வீச்சில்ஈடுபட்டனர். இதில் நான்கு போலீசாரும் ஒரு பஸ் டிரைவரும், ஒரு கண்டக்டரும் காயமடைந்தனர். மேலும் ஒருஅரசு பஸ், தனியார் வேன் உள்ளிட்ட சில வாகனங்கள் சேதமடைந்தன.
இதையடுத்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்காகப் போலீசார் கண்ணீர்புகைக் குண்டுகளை இருமுறை வீசினர். இதைத் தொடர்ந்து அப்பகுதியில் கடும் பதற்றம் நிலவியது.
இதனால் அங்கு ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இன்றும் அவர்கள் பாதுகாப்புப் பணியில்ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே இன்று மேட்டூர் அணையைப் பார்வையிட வரும் காவிரி கண்காணிப்புக் குழுவினர் காவிரிடெல்டா பகுதிகளுக்கும் வந்து ஆய்வு நடத்தவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-->












Click it and Unblock the Notifications