நெல் கொள்முதல்: கூடுதல் ஊக்கத் தொகை கோரி வாஜ்பாய்க்கு ஜெ. கடிதம்
சென்னை:
மத்திய அரசு கொள்முதல் செய்யும் ஒரு குவின்டால் நெல்லுக்குரிய ஊக்கத் தொகையை ரூ.20லிருந்து ரூ.40ஆகஉயர்த்த வேண்டும் என்று பிரதமர் வாஜ்பாயிடம் தமிழக முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக வாஜ்பாய்க்கு ஜெயலலிதா இன்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில்,
வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக விவசாயிகளுக்கு உதவும் வகையில் பொருத்தமான சலுகைகள் அடங்கியநிவாரணத் திட்டத்தை மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.
அதன்படி இந்த ஆண்டு விவசாயிகளுக்கான வறட்சி நிவாரணத் தொகையை மத்திய அரசு உடனடியாக அளிப்பதுமிகவும் அவசியம்.
மேலும் குறுவைப் பருவத்திலும் கூட 25 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை தமிழக விவசாயிகளிடமிருந்துகொள்முதல் செய்யவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மத்திய அரசு கொள்முதல் செய்யும் நெல்லுக்குரிய ஊக்கத் தொகையை ஒரு குவின்டாலுக்கு ரூ.20லிருந்துரூ.40ஆக அதிகரிக்க வகை செய்ய வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் ஜெயலலிதா கூறியுள்ளார்.
-->












Click it and Unblock the Notifications