மக்களை கசக்கிப் பிழிகிறது ஜெ. அரசு: ராமதாஸ்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நிதி நெருக்கடி என்ற பெயரில் தமிழக அரசு மக்களைக் கசக்கிப் பிழிவதில் எந்தவிதமான நியாயமும் இல்லைஎன்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஒரு கண்டன அறிக்கையில்,
தமிழக அரசு விரைவில் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தப் போவதாகத் தெரிகிறது. முதல்வர் ஜெயலலிதாவே இதுதொடர்பாக சமீபத்தில் பேசியுள்ளார்.
தமிழக மின் வாரியம் மிகவும் நெருக்கடியான நிதி நிலைமையைச் சந்தித்து வருவதால் தான் இந்த மின் கட்டணஉயர்வு என்றும் அவர் கூறியுள்ளார்.
நிதி நெருக்கடிக்கான காரணங்களை ஆராய்ந்து அதற்கான வேறு மாற்று வழிகளைக் கையாள வேண்டியது தான்அரசின் கடமை.
அதை விட்டுவிட்டு அந்தச் சுமையை மக்களின் மீது சுமத்தி அவர்களைக் கசக்கிப் பிழிவது எந்த விதத்திலும்நியாயமே இல்லை என்று கூறியுள்ளார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications