மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி சென்னை to
சென்னை:
மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி சென்னையிலிருந்து சிதம்பரம் வரை "ஸ்கேட்டிங்" பயணம் மேற்கொண்டுள்ளான்ஒரு 10 வயதுச் சிறுவன்.
சென்னை குடிநீர் வாரியத்தில் பணிபுரியும் டி. மணிமொழி என்பவரின் மகன் தீபக், அண்ணாநகரில் உள்ளஜெய்கோபால் கரோடியா விவேகானந்தா வித்யாலயாவில் 6ம் வகுப்பு படித்து வருகிறான்.
மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி சென்னையிலிருந்து சிதம்பரத்திற்கு "ஸ்கேட்டிங்" பயணம் செய்ய தீபக் முடிவுசெய்தான்.
அதன்படி இந்தச் சாதனைப் பயணத்தை நேற்று காலை 7 மணிக்கு தீபக் தொடங்கினான். தமிழக உள்ளாட்சித்துறைஅமைச்சரான எம்.சி. சம்பத் இந்தப் பயணத்தைத் தொடங்கி வைத்தார்.
தீபக்குடன் அவனுடைய தந்தை, பயிற்சியாளர் கே.பி. உன்னிகிருஷ்ணன் ஆகியோரும் செல்கின்றனர். இன்றுபிற்பகல் இவர்கள் சிதம்பரம் சென்றடைவார்கள்.
சுமார் 250 கி.மீ. தூரமுள்ள இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ள தீபக் நிருபர்களிடம் கூறுகையில்,
தற்போது எங்கு பார்த்தாலும் மதக் கலவரமும், வன்முறையும் நடந்து வருகின்றன.
நம் நாட்டில் ஒற்றுமை நிலவ வேண்டும் என்பதையும், மத நல்லிணக்கம் ஏற்பட வேண்டும் என்பதையும்வலியுறுத்தி நான் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளேன் என்றான்.
தீபக் ஏற்கனவே கடந்த ஜூன் 10ம் தேதி சென்னையிலிருந்து காஞ்சிபுரத்திற்கு (சுமார் 70 கி.மீ.) "ஸ்கேட்டிங்"பயணம் செய்து காஞ்சி சங்கராச்சாரியாரான ஸ்ரீஜெயேந்திர சுவாமிகளிடம் பாராட்டு பெற்றான்.












Click it and Unblock the Notifications