ஆஸ்திரிய பெண் கொலை வழக்கு: குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை
சென்னை:
சென்னையில் தங்கிப் படித்து வந்த ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த இந்தியப் பெண் ஆஷாவை கொடூரமாககொன்றவருக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
ஆஸ்திரியாவைச் சேர்ந்த இந்தியப் பெண் ஆஷா. இவர் சில ஆண்டுகளுக்கு முன் சென்னை வந்து தங்கிப்படித்தார். அவர் தங்கியிருந்த ஹாஸ்டலுக்கு அருகிலுள்ள ராஜ்மோகன் என்பவருக்கும், ஆஷாவுக்கும் பழக்கம்ஏற்பட்டது.
பழக்கம் ஏற்பட்ட சில நாட்களுக்குப் பிறகு ஆஷாவை அடைய முயன்றார் ராஜ் மோகன். ஆனால் ஆஷா அதற்குசம்மதிக்கவில்லை.
இதையடுத்து ஆஷாவை ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்ற ராஜ் மோகன் அங்கு அவரை தலையணையைமுகத்தில் வைத்து அழுத்தியும், கத்தியால் கழுத்தை அறுத்தும் பயங்கரமாக கொலை செய்தார். பின்னர் தப்பிவிட்டார்.
இந்த நிலையில், ஊட்டியில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டபோது கடந்த 2000மாவது ஆண்டு ராஜ் மோகன்பிடிபட்டார். பின்னர் அவர் சென்னை கொண்டு வரப்பட்டார். அதன் பின்னர் தான் ஆஷா கொலை தொடர்பானவழக்கு விசாரணை தொடங்கியது.
சென்னை 4வது அதிவிரைவு நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில் ராஜ் மோகனுக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனைவிதித்து நீதிபதி பாரதி தீர்ப்பளித்தார்.












Click it and Unblock the Notifications