நெல்லை அரசு மருத்துவமனையில் நர்ஸ் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:
திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் வேலை பார்த்து வந்த ஒரு நர்ஸ் மருத்துவமனை வளாகத்திலேயேதற்கொலை செய்து கொண்டார்.
திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தவர் மல்லிகா. இப்போது சமீபத்தில்மருத்துவமனையிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்நிலையில் கடந்த மாத சம்பளத்தை வாங்குவதற்காக அவர் மருத்துவமனைக்கு வந்தார்.
அப்போது மருத்துவமனை வளாகத்திலேயே மல்லிகா திடீரென்று விஷம் சாப்பிட்டு மயங்கி விழுந்தார்.உடனடியாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் மல்லிகா இறந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications