இளைஞிகளை வெட்கப்பட வைக்கும் 120 வயது பாட்டி
சேலம்:
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே 120 வயதைத் தாண்டியும் ஒரு மூதாட்டி படு சுறுசுறுப்புடனும்உற்சாகமாத்துடனும் இருந்து வருகிறார்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ளது புதூர். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் குப்பாயி. இவருக்கு வயது 120.
இருப்பினும் 16 வயதுப் பெண் போல இன்னும் உற்சாகம் குன்றாமல் படு தெம்புடன் இருந்து வருகிறார் இந்தக்குப்பாயி.
குப்பாயிக்கு 5 மகன்களும், 6 மகள்களும் உள்ளனர். இவர்கள் மூலம் பேரன், பேத்திகள், கொள்ளுப் பேரன்,பேத்திகள் என 150 பேர் வரை இவருடைய குடும்பத்தில் உள்ளனர்.
இவ்வளவு பேரன்கள் இருந்தாலும் இன்னும் மனதுக்குள் இளமையாகவே இருக்கிறாராம் குப்பாயி. அவரதுவேலைகளை அவரே செய்து கொள்கிறார். நன்றாகப் பேசுகிறார். காதும் மிகத் தெளிவாகக் கேட்கிறது. கணீர்குரலில் தான் பேசவும் செய்கிறார்.
படு சுறுசுறுப்புடனும் உற்சாகத்துடனும் வளைய வந்து கொண்டிருக்கும் குப்பாயி, எதற்கும் எப்போதுமேகவலைப்படுவது கிடையாதாம்.
இந்த மூதாட்டியை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அடிக்கடி வந்து "வேடிக்கை" பார்த்து விட்டுச் செல்கிறார்கள்.
20 வயதிலேயே வகை வகையான பிரச்சினைகளை சந்திக்கும் இந்தக் கால இளைஞிகளுக்கும், இளைஞர்களுக்கும்குப்பாயி ஒரு "மகா புருஷி" என்பதில் சந்தேகம் இல்லை.












Click it and Unblock the Notifications