கணவர் இறந்த துக்கம்: குழந்தைடன் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
ஈரோடு:
கணவர் இறந்த துக்கம் தாளாத ஒரு பெண் தனது குழந்தையை கிணற்றில் வீசிக் கொன்று விட்டு தானும் அதிலேயேகுதித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு மாவட்டம் குருவரெட்டியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி குமுதா. இவர்களுக்கு ஜீவிதாஎன்ற 4 வயது மகள் இருந்தாள்.
சமீபத்தில் பழனி இறந்து விட்டார். இதனால் மன வருத்தம் அடைந்த குமுதா கடும் வேதனையில் வாடி வந்தார்.
இந்த நிலையில் ஜீவிதாவைக் கிணற்றில் வீசிக் கொன்ற குமுதா தானும் அதே கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications