ரஜினி குறித்து இன்று நடிகர்கள் ஆலோசனை
சென்னை:
கர்நாடகத்திற்கு எதிரான நெய்வேலி முற்றுகைப் போராட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று ரஜினிகாந்த் கூறியிருப்பது குறித்து சனிக்கிழமை கூடும் நடிகர் சங்கக் கூட்டத்தில் விவாதிப்போம் என்று நடிகர் சங்கதுணைத்தலைவர் சரத்குமார் கூறினார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் ரஜினிகாந்த்தின் அறிக்கை குறித்து நடிகர் சங்கத்தில் பேசப்படும்.
என்னைப் பொருத்தவரையில் நெய்வேலிப் போராட்டத்தில் நடிகர்கள், நடிகைகள் முழுமையாக கலந்து கொள்ளவேண்டும் என்று விரும்புகிறேன். நாங்கள் மட்டுமல்லாது, எங்களது ரசிகர்களும் பெருமளவில் கலந்துகொள்ளவிருக்கிறார்கள்.
விவசாயிகளின் உணர்வுகளுக்கு தார்மீக ஆதரவாகத்தான் நாங்கள் போராட்டம் நடத்துகிறோம்.
விஜயகாந்த் கண்டிப்பாக இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்வார். அவருடன் இதுகுறித்துப் பேசியுள்ளேன்.லண்டன் சென்றுள்ள அவர் நிச்சயம் போராட்டத்தில் பங்கேற்பார் என்றார் சரத்குமார்.












Click it and Unblock the Notifications