ரஜினிக்கு முக்கியத்துவம் தர வேண்டாம்: பாஜக
நாகர்கோவில்:
காவிரிப் பிரச்சினையில் ரஜினி காந்த்தை முக்கியத்துவம் வாய்ந்த நபராக கருதத் தேவையில்லை. அவர் ஒரு தனி மனிதர்,அவ்வளவுதான் என்று பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர் கிருபாநிதி கூறியுள்ளார்.
நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சுப்ரீம் கோர்ட் உத்தரவு, காவிரி நதி நீர் ஆணையம் ஆகியவற்றின்உத்தரவுகளை மதிக்காமல் தன்னிச்சையாக செயல்படுகிறது கர்நாடகம்.
இது சட்டவிரோதமானது. இந்தக் காரணத்திற்காக கர்நாடக அரசை டிஸ்மிஸ் செய்து குடியரசுத்தலைவர் ஆட்சியை அங்கு அமல்செய்ய வேண்டும்.
காவிரிப் பிரச்சினையில் ரஜினி காந்த்தை முக்கியத்துவம் வாய்ந்த நபராக கருதத் தேவையில்லை என்றார் கிருபாநிதி.
கர்நாடகம் தண்ணீர் விட வேண்டும்:
உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதித்து தமிழகத்துக்கு கர்நாடகம் உடனே தண்ணீர் திறந்துவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சீதாராம் யெச்சூரி தெரிவித்தார். இதில் மெச்சூரிட்டி இல்லாமல் கர்நாடகம் நடந்துகொள்ளக் கூடாது என்றார்.












Click it and Unblock the Notifications