For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குமரியிலிருந்து டெல்லிக்கு 14ம் தேதி முதல் "திருக்குறள் எக்ஸ்பிரஸ்"

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கன்னியாகுமரியிலிருந்து டெல்லிக்குப் புதிதாக "திருக்குறள் எக்ஸ்பிரஸ்" என்ற ரயில் வரும் 14ம் தேதி முதல்இயக்கப்படவுள்ளதாக ரயில்வேத்துறை இணை அமைச்சர் ஏ.கே. மூர்த்தி கூறினார்.

இதுகுறித்து மூர்த்தி சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

ஆயுத பூஜை தினமான வரும் 14ம் தேதி முதல் திருக்குறள் தொடர் எக்ஸ்பிரஸ் ரயில் இயங்கத் தொடங்கும்.கன்னியாகுமரியிலிருந்து மதுரை, திருச்சி, விழுப்புரம், சென்னை வழியாக இந்த ரயில் டெல்லி செல்லும்.

மொத்தம் 13 பெட்டிகளைக் கொண்டிருக்கும் இந்த ரயிலில் ரூ.100 செலுத்தி 3 வேளை சாப்பாடு வசதியைப்பெறலாம். இதுதவிர குடிநீர் வசதி, காபி, டீ வசதி உள்ளிட்டவையும் இருக்கும். குழந்தைகளுக்கு தொட்டில்வசதியும் உள்ளது.

ரயிலின் ஒவ்வொரு பெட்டியிலும், தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தியில் திருக்குறள் வாசகங்கள்பொறிக்கப்பட்டிருக்கும். ரயிலில் திருக்குறள் இடம் பெறுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ரயில் தவிர மேலும் 2 புதிய ஜனசதாப்தி ரயில்கள் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இதில் ஒருரயில் ஜனவரி முதல் தேதியும், மற்றொரு ரயில் பொங்கல் அன்றும் தொடங்கப்படும்.

மேலும், கோவையிலிருந்து சென்னைக்கு புதிதாக ஒரு ரயில் அறிமுகப்படுத்தப்படும் என்றார் மூர்த்தி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X