கர்நாடகத்தை கண்டித்து கோவை விவசாய கல்லூரி மாணவர்கள் போராட்டம்

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்:

காவிரியில் உடனே நீர் விடக் கோரி கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு விவசாயப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்றுபோராட்டம் நடத்தினர்.

சுமார் 1,000 மாணவர்கள் இன்று பல்கலைக்கழக வளாகத்திற்குள் ஊர்வலம் நடத்தி கர்நாடகத்தையும் மத்திய அரசையும்கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

கருப்புப் பட்டைகள் அணிந்து இந்த மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மாணவர் சங்கப் பிரதிநிதிகள்மாவட்ட கலெக்டரை சந்தித்து கர்நாடகத்துக்கு எதிரான அரசின் நடவடிக்கைகளுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.

இன்று ஒரு நாள் அவர்கள் வகுப்புகளையும் புறக்கணித்தனர்.

இதே போல கோவையின் பல்வேறு கல்லூரிகளிலும் மாணவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

பந்துக்கு காங்கிரஸ் ஆதரவு:

இந் நிலையில் கர்நாடகத்துக்கு எதிராக நாளை நடக்கவுள்ள தமிழக பந்த்தை அனைவரும் ஆதரிக்க வேண்டும் என காங்கிரஸ்தலைவர் சோ.பாலகிருஷ்ணனும் செயல் தலைவர் இளங்கோவனும் கூறியுள்ளனர்.

அவர்கள் விடுத்துள்ள கூட்டறிக்கையில், இது ஒரு அடையாள வேலை நிறுத்தம் தான். இதை அமைதியாக வகையில்கடைபிடிப்போம் என்று கூறியுள்ளனர்.

இதே போல தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் சங்கமும் இந்தப் போராட்டத்தை வரவேற்றுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+