தமிழகத்தில் நாளை பந்த்: கருணாநிதி முழு ஆதரவு
சென்னை:
காவிரியில் கர்நாடகம் நீர் திறந்து விடாததைக் கண்டித்து தமிழகத்தில் நாளை நடைபெறவுள்ள பொதுவேலைநிறுத்தத்திற்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது.
கர்நாடகத்தை எதிர்த்தும் மத்திய அரசின் மெத்தனப் போக்கைக் கண்டித்தும் தமிழகத்தில் நாளை பொதுவேலைநிறுத்தம் செய்யப்படும் என்று நேற்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒருமனதாக முடிவுசெய்யப்பட்டது.
இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தை திமுக புறக்கணித்த போதிலும், காவிரி பிரச்சனை தொடர்பாக பந்த் நடத்தஇக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டால் அதற்கு திமுக ஆதரவு அளிக்கும் என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதிகூறியிருந்தார்.
இந்நிலையில் அவர் கூறியது போலவே நாளை (புதன்கிழமை) தமிழகத்தில் பந்த் நடைபெறும் என்று அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதை கருணாநிதி வரவேற்றார்.
இது தொடர்பாக நேற்று மாலை நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
இந்தப் பொது வேலைநிறுத்தத்திற்கு திமுக முழு ஆதரவு அளிக்கிறது.
முழு அடைப்பு நடத்த முடிவு எடுத்துள்ள அனைத்துக் கட்சியினருக்கும் திமுக சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பந்த் வெற்றி பெற தமிழகம் முழுவதிலும் உள்ள திமுகவினர் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications