நெடுமாறனை விடுதலை செய்ய உலக தமிழர் கூட்டமைப்பு கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறனை விடுதலைசெய்ய வேண்டும் என்று உலகத் தமிழர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக கடந்த ஆகஸ்டு 1 தேதி நெடுமாறன் கைது செய்யப்பட்டார்.தற்போது அவர் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நெடுமாறனை விடுதலை செய்யக் கோரி உலகத் தமிழர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக இந்த அமைப்பின் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், கோவில் பூசாரிகளாக செயல்பட விரும்புவோருக்கு பயிற்சி அளிக்க பயிற்சிப் பள்ளிகளை அமைக்கவும்அரசுக்கு இந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications