மதுரை, ஊட்டியில் பலத்த மழை

Subscribe to Oneindia Tamil

ஊட்டி:

நீலகிரி, பெரம்பலூர், மதுரை மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ளதால் ஓரளவு வறட்சி குறைந்துள்ளதாகவிவசாயிகள் தெரிவித்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி ஆகிய இடங்களில் தொடர்ந்து மூன்று நாட்களாக நல்ல மழைபெய்து வருகிறது. அடை மழையாகப் பெய்வதால் இம்மாவட்டத்தில் உள்ள அணைகளில் நீர்வரத்து உயரத்தொடங்கியுள்ளது.

இதேபோல பெரம்பலூர் மற்றும் மதுரை மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்தது. பெரம்பலூரில் பல இடங்களில்தொலைபேசி வயர்கள் அறுந்து விழுந்ததால் தொலைத் தொடர்பு வசதி துண்டிக்கப்பட்டது.

மதுரையில் கடந்த மூன்று நாட்களாக நல்ல மழை பெய்தது. இதனால் கொளுத்தும் வெயிலில் அவதிப்பட்டு வந்தமதுரை நகர மக்கள் இந்தத் திடீர் மழையால் மிகவும் மகிழ்ந்து போனார்கள்.

இந்தத் தொடர் மழையால் விவசாயிகள் பெரிதும் மகிழ்ந்துள்ளனர். கடந்த ஆறு மாதங்களுக்குப் பிறகு இப்போதுதான் நல்ல மழை பெய்வதாக அவர்கள் தெரிவித்தனர்.

இந்த மழை அப்படியே வடகிழக்குப் பருவமழையாகத் தொடர்ந்து பெய்தால் வறட்சி நிலை நன்றாகத் தணியும்என்றும் விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+