ரஜினி, கிருஷ்ணா கொடும்பாவிகள் எரிப்பு
சென்னை:
தமிழகத்தில் இன்று பந்த் நடந்து கொண்டிருக்கும் நிலையில் சென்னையில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கர்நாடகமுதல்வர் கிருஷ்ணா ஆகியோரின் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன.
"உதயம்" தியேட்டரில் திரையிடப்பட்டுள்ள பாபா படத்தை தூக்கக் கோரி ரஜினியின் கொடும்பாவியை எரித்த 32பாமக தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
காவிரியில் தமிழகத்திற்கு நீர் திறந்துவிடப்படாததைக் கண்டித்து அனைத்துக் கட்சிகள் சார்பில் இன்று தமிழகத்தில்பந்த் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சென்னையில் பல இடங்ளில் ரஜினியின் கொடும்பாவி எரிக்கப்பட்டன. அதே போல கிருஷ்ணாவின்உருவ பொம்மையையும் சிலர் எரித்தனர்.
இதனால் அப்பகுதிகளில் பதற்றம் ஏற்படும் சூழ்நிலை உருவானது. ஆனால் போலீசார் உடனடியாக அந்தஇடங்களுக்கு விரைந்து சென்று அமைதி ஏற்படுத்தினர்.
இதற்கிடையே சென்னையில் உள்ள "உதயம்" தியேட்டரில் "பாபா" படத்தை திரையிடக் கூடாது என்று அந்தத்தியேட்டருக்கு முன்பாக பாமகவினர் இன்று கறுப்புக் கொடிகளுடன் போராட்டம் நடத்தினர்.
அப்போது ரஜினியின் கொடும்பாவியையும் அவர்கள் எரித்தனர். இதையடுத்து அப்பகுதியில் சற்று நேரம் பதற்றம்ஏற்பட்டது.
உடனடியாக அப்பகுதிக்கு விரைந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 32 பாமக தொண்டர்களைக் கைதுசெய்தனர்.












Click it and Unblock the Notifications