""குண்டர் சட்டத்தில் "செக்ஸ்" டாக்டர் கைது சரியே"": சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
சென்னை:
சென்னையைச் சேர்ந்த இன்டர்நெட் செக்ஸ் பட புகழ் டாக்டர் பிரகாஷை தமிழக அரசு குண்டர் சட்டத்தின் கீழ்கைது செய்துள்ளது சரியான செயல் தான் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னையச் சேர்ந்த டாக்டர் பிரகாஷ், பெண்களை மிரட்டி ஆபாசப் படம் எடுத்து அதை இன்டர்நெட்டில்வெளியிட்டு லட்சக்கணக்கில் சம்பாதித்து வந்தார்.
கடந்த பிப்ரவரி மாதம் இந்தக் குட்டு வெளிப்பட்டு அவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.அவரிடமிருந்து கிடைத்த வாக்குமூலம் மற்றும் ஆபாசப் படங்கள் இந்தியாவையே குலுக்கின.
இந்த நிலையில் தன்னை குண்டர் சட்டத்தில் கைது செய்தது சரியல்ல என்றும், தன்னை இந்த வழக்கிலிருந்துவிடுவிக்க கோரியும் டாக்டர் பிரகாஷ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த நீதிபதிகள் சிங் மற்றும் சந்தோஷ் ஹெக்டே ஆகியோர், குற்றச் செயலில் ஈடுபட்டுள்ள டாக்டர்பிரகாஷை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தது சரியான செயல் தான் என்று தீர்ப்பளித்தனர்.
மேலும் டாக்டர் பிரகாஷின் மனுவும் உச்ச நீதிமன்றத்தில் டிஸ்மிஸ் செய்யப்பட்டது.