ஐ.ஜி., டி.ஐ.ஜிக்கள் தலைமையில் பாதுகாப்பு படு தீவிரம்
நெய்வேலி:
நெய்வேலியில் இன்று பிற்பகலில் நடக்கவுள்ள கலையுலகப் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்திற்கு பாதுகாப்புஅளிக்க காவல்துறை முடுக்கி விடப்பட்டுள்ளது.
தமிழக வடக்கு மண்டல காவல்துறை ஐ.ஜி .ஜார்ஜ் தலைமையில், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. விஜயக்குமார்மேற்பார்வையில் 4 டி.ஐ.ஜிக்கள், 5 எஸ்.பிக்கள், 6,000 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இது தவிர நெய்வேலி மின் நிலையத்துக்கு வழக்கமாக பாதுகாப்பு கொடுத்து வரும் மத்திய அரசின் தொழில்துறைபாதுகாப்புப் படையும் தனது கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. இந்தப் படை வீரர்களின் விடுமுறைகள் ரத்துசெய்யப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஊர்வலம் தொடங்கும் இடத்திலிருந்து நெய்வேலி லிக்னைட் கார்பரேஷன் தலைமை அலுவலகம் வரைபோலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். சாதாரண உடையிலும் போலீஸார் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளனர்.
தடுப்புக் கட்டைகளை மீறி ரசிகர்கள் உள்ளே புகுந்தால் அவர்களை சமாளிக்க கலவரத் தடுப்புப் போலீஸாரும்நிறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் தீவிரவாதிகள் ஏதும் இந்தப் பேரணியில் புகுந்துவிடாமல் தடுக்க ஆங்காங்கே ரகசிய கேமராக்களைவைத்து கண்காணிக்கும் பணியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
எக்காரணம் கொண்டும் யாரையும் மின் நிலையத்துக்குள் அனுமதித்துவிட வேண்டாம் என மத்திய அரசும், மாநிலஅரசும் உத்தரவிட்டுள்ளன.












Click it and Unblock the Notifications