ரஜினியின் உணர்வு மிகப் பெரியது: கருணாநிதி
சென்னை:
தென்னிந்திய நதிகளை இணைப்பதற்கு ரூ.1 கோடி ரூபாய் தருவதாக ரஜினிகாந்த் கூறியுள்ளார். இது மிகவும் சிறியதொகையாக இருந்தாலும், அவரது அறிவிப்பு மிகப் பெரியது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
தென்னிந்திய நதிகளை இணைப்பது குறித்து 1970, 72ம் ஆண்டுகளில் அப்போதைய கர்நாடக முதல்வர் வீரேந்திரபாட்டீல், கேரள முதல்வர் அச்சுதமேனன் ஆகியோருடன் நான் விவாதித்துள்ளேன்.
அப்போது நான் கூறிய கருத்து இப்போது மீண்டும் உயிர் பெற்றிருப்பது சந்தோஷம் தருகிறது.
தென்னிந்திய நதிகளை இணைப்பதற்காக ரூ.1 கோடி தருவதாக ரஜினி கூறியுள்ளார். அந்தத் திட்டத்திற்கு இந்தத்தொகை மிகவும் குறைவானது, போதாது என்றாலும் கூட அவரது உணர்வு மிகமிகப் பெரியது.
சுப்ரீம் கோர்ட், காவிரி ஆணையம் ஆகியவற்றின் உத்தரவுகளை கர்நாடக அரசு தொடர்ந்து மீறி வருகிறது.எனவே பிரதமர் வாஜ்பாய் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி அரசியல் சட்டத்தின் 256வது பிரிவைப்பயன்படுத்தி கர்நாடகத்திற்கு உத்தரவிட வேண்டும்.
தமிழகத்திற்கு உரிய நீர் கிடைக்க ஆவண செய்ய வேண்டும் என்றார் கருணாநிதி.
நெய்வேலி கூட்டத்தில் பாரதிராஜா கூறிய கருத்துக்கள் குறித்து கருத்துத் தெரிவிக்க கருணாநிதி மறுத்து விட்டார்.












Click it and Unblock the Notifications