மேட்டூர் அணையை ஆசீர்வதித்த மழை
சேலம்:
மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து காவிரி டெல்டா பாசனத்திற்காகஅந்த அணையிலிருந்து நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
காவிரி டெல்டா பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
அணையில் தற்போது 40.9 அடி தண்ணீர் உள்ளது. கடந்த மூன்று நாட்களில் 2 அடிக்கு மேல் தண்ணீர் வந்துள்ளது.அணைக்கு விநாடிக்கு 5,820 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிரூந்து விநாடிக்கு 5,312 கன அடிநீர் வெளியேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் காவிரிப் பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்துவிடப்பட்டுள்ளதாகபொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்தால் மேலும் அதிகஅளவு நீர் திறந்துவிடப்படும் என்றும் அவர்கள் கூறினர்.
தற்போது மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து இருப்பதாலும், அணையிலிருந்து நீர்திறந்துவிடப்பட்டிருப்பதாலும் காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதையடுத்து, கடந்த சில மாதங்களாகச் சூடு பிடித்து, நடிகர் ரஜினிகாந்த்தின் உண்ணாவிரதப் போராட்டம் வரைஉச்சகட்டத்தை அடைந்த காவிரிப் பிரச்சனை இப்போதைக்கு கொஞ்சம் தணியும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications