For Daily Alerts
Just In
ரூ.1 லட்சம் சந்தனக் கட்டைகள் பறிமுதல்
வேலூர்:
வேலூர் மாவட்டம் கண்ணமங்கலம் என்ற இடத்தில் சந்தனக் கட்டைகளைக் கடத்தி வந்த அம்பாசடர் கார் பறிமுதல்செய்யப்பட்டது.
வேலூரிலிருந்து சென்னைக்கு சந்தனக் கட்டைகள் கடத்தப்படுவதாக வனத்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து சென்னை நெடுஞ்சாலையில் வனத்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். கண்ணமங்கலம்என்ற இடத்தில் நடந்த இந்த சோதனையின் போது ஒரு அம்பாசடர் கார் நிற்காமல் சென்றது.
இதையடுத்து அந்தக் காரை அதிகாரிகள் துரத்திச் சென்று மடக்கினர். ஆனால் டிரைவர் இறங்கி ஓடி விட்டார்.காரில் சோதனை செய்தபோது, அதில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள 200 கிலோ சந்தனக் கட்டைகள் மூட்டைகளாககட்டப்பட்டு இருந்தன.
இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.
Comments
Story first published: Tuesday, October 15, 2002, 5:30 [IST]