23ம் தேதி முதல் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளபடி வரும் 23ம் தேதி முதல் காலவரையற்றவேலைநிறுத்தம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று கூட்டமைப்பின் தலைவர் மீனாட்சி சுந்தரம் தெரிவித்தார்.
திருவாரூரில் போராட்டம் குறித்த ஆயத்த மாநாடு நடந்தது. கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் மீனாட்சிசுந்தரம் பேசுகையில்,
அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட்டு வந்த சலுகைகள் பறிக்கப்பட்டுள்ளன. அவை திரும்பக்கொடுக்கப்படும் வரை போராட்டம் நடத்துவோம்.
வரும் 23ம் தேதி திட்டமிட்டபடி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கும். வேலைநீக்கம், சம்பளம்ரத்து போன்ற அரசின் எச்சரிக்கை குறித்துக் கவலையில்லை என்றார் அவர்.












Click it and Unblock the Notifications