பெங்களூரில் தமிழ் சேனல்கள் "கட்": நீதிமன்றத்தில் போராட தமிழ் சங்கம் முடிவு
பெங்களூர்:
கர்நாடகத்தில் தமிழ் டி.வி. சேனல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குதொடர பெங்களூர் தமிழ்ச் சங்கம் முடிவு செய்துள்ளது.
கடந்த 2 வாரங்களாகவே கர்நாடகம் முழுவதும் தமிழ் டி.வி. சேனல்கள் ஒளிபரப்பு தடை செய்யப்பட்டுவிட்டது.இதன் மூலம் கர்நாடகத்தில் வாழும் சுமார் 1 கோடி தமிழர்களின் அடிப்படை உரிமையை கர்நாடகம்பறித்துள்ளது.
இலங்கையில் சிங்கள இன வெறியர்கள் செய்த கொடுமைகளை நினைவுபடுத்தும் விதத்தில் தமிழை ஒழிக்கும்முயற்சிகள் நடக்கின்றன. முதலில் தமிழர்களுக்கு அரசு வேலை வாய்ப்புகளை கட் செய்த கர்நாடகம் படிப்படியாகதமிழர் விரோத செயல்களில் ஈடுபட்டுள்ளது.
இதை மத்திய அரசு கண்டும் காணாமல் இருந்து வருகிறது. இப்போது தமிழ் திரைப்படங்களும் திரையிட தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பெங்களூர் தமிழ்ச் சங்கம் இந்த தமிழர் விரோத செயல்களுக்கு எதிராக நீதிமன்றத்தை அணுக முடிவுசெய்துள்ளது. "காவிரிச் சிக்கலின் விளைவு" என்ற தலைப்பில் சமீபத்தில் தமிழச் சங்கத்தில் முழு அளவிலானவிவாதம் நடந்தது.
அப்போது, காவிரிப் பிரச்சனையில் கர்நாடக அரசுக்கு தமிழ்ச் சங்கம் ஆதரவளித்தும் கூட சில அரசியல்அமைப்புகளும் கன்னட அமைப்புகளும் சேர்ந்து கொண்டு தமிழர்களைக் குறிவைத்துத் தாக்கி வருகின்றன என்றுசங்கத்தின் தலைவர் க. சுப்பிரமணியன் குற்றம் சாட்டினார்.
கர்நாடகத்தில் பிறந்து வாழும் தமிழர்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுவதைத் தடுக்க முதல்வர்கிருஷ்ணா தவறிவிட்டார் என்றும் பெங்களூர் தமிழ்ச் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
கர்நாடகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள தமிழ் டி.வி. சேனல்களை உடனடியாக மீண்டும் தொடங்கவில்லைஎன்றால் கேபிள் இணைப்புகளைத் துண்டிப்பது, கேபிள் கட்டணத்தை கொடுக்காமல் நிறுத்துவது, இதை எதிர்த்துஉச்ச நீதிமன்றம் அல்லது நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது உள்ளிட்ட தீர்மானங்கள் தமிழ்ச் சங்கக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
கர்நாடகத்தில் தமிழர்கள் வாழும் பகுதிகளுக்கு பாதுகாப்பு வழங்க மத்திய போலீஸ் படையை அனுப்ப வேண்டும்என்றும் இக்கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.