தலித்களை ஒடுக்கவே மத மாற்றத் தடை சட்டம்: ஆர்ச் பிஷப் குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மதமாற்றத் தடைச் சட்டம் தலித்களுக்கும் சிறுபான்மையினருக்கும் எதிராக கொண்டு வரப்பட்டது என்று பாண்டிச்சேரி மற்றும்கடலூர் மண்டல டயாசிஸ்சின் ஆர்ச் பிஷப் டாக்டர் மைக்கேல் அகஸ்டின் கூறியுள்ளார்.

சென்னையில் நிருபர்களிடம் பேசிய அவர், இந்தச் சட்டத்தை அரசு உடனே வாபஸ் பெற வேண்டும். இச் சட்டத்தை எதிர்த்துவரும் 19ம் தேதி அனைத்து மண்டல டயாசிஸ்சை சேர்ந்தவர்களும் மாநிலம் தழுவிய அளவில் உண்ணாவிரதம் இருப்போம்.

24ம் தேதி அனைத்து கிருஸ்தவ கல்வி நிலையங்களும் மூடப்படும்.

இச் சட்டம் சமூகத்தால் ஒடுக்கப்பட்ட தலித்களை மேலும் ஒடுக்கவே கொண்டு வரப்பட்டுள்ளது. இதை தலித்கள் கடுமையாகஎதிர்க்கிறார்கள். மேலும் அச் சட்டத்தை வைத்து சிறுபான்மையினரையும் ஒடுக்க அரசு நினைக்கிறது.

இச் சட்டத்தை அரசு நிச்சயம் தவறாகப் பயன்படுத்தும் என்றார் டாக்டர் மைக்ல்ே அகஸ்டின்.

மதுரையிலும்..

இதற்கிடையே மதுரையில் சிறுபான்மையினர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரான பங்குத் தந்தை ஆண்டனி பாக்கியம்நிருபர்களிடம் கூறுகையில்,

ஒடுக்கப்பட்டுள்ள தலித்களுக்கு மறுவாழ்வு கிடைக்கச் செய்ய எடுக்கப்படும் நல்ல முயற்சிகளை தடை செய்யவும், தலித்களுக்குநல் வாழ்கை தர முயல்பவர்களை மிரட்டவுமே இந்த மத மாற்றத் தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

19ம் தேதி இந்த சட்டத்தை எதிர்த்து மதுரையில் நடக்கும் கண்டனப் பேரணியில் மார்க்சிஸ்ட் எம்.பி. மோகன், மதுரை மேயர்செ.ராமச்சந்திரன்,, காங்கிரஸ் எம்.எல்.ஏ. சுதர்சனம் நாச்சியப்பன் உள்பட பலரும் கலந்து கொள்வர் என்றார்.

கருணாநிதியுடன் சந்திப்பு:

இந் நிலையில் சிறுபான்மையினர் அமைப்புகளைச் சேர்ந்த பல தலைவர்களும் திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்து இந்தச்சட்டத்துக்கு எதிராக ஆதரவு கோரினர்.

சட்டசபையில் விவாதம்:

இந் நிலையில் இந்த மதமாற்றத் தடுப்புச் சட்டம் குறித்து சட்டசபையில் விவாதிகப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

தமிழக சட்டசபைக் கூட்டம் வரும் 24ம் தேதி தொடங்குகிறது. இத் தொடரில் விவாதிக்கப்பட உள்ள அம்சங்கள் குறித்துசட்டசபை முதன்மைச் செயலர் சி.எஸ்.ஜானகிராமன் கூறுகையில்,

கோர்ட் கட்டண மாற்ற சட்டமசோதா, அரிசி மீதான விற்பனை வரி விதிப்பு சட்டம், நகராட்சி, மாநகராட்சி சிறப்புஅதிகாரிகளின் பதவி நீட்டிப்பு, கட்டாய மதமாற்ற தடுப்பு மசோதா ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டு மசோதாக்கள்நிறைவேற்றப்படும் என்றார்.

இந்த சட்டசபைக் கூட்டத்தில் காவிரி விவகாரம் மிக முக்கிய இடம் பிடிக்கும் என்பது நிச்சயம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+