டெல்லியில் நாளை முதல்வர்கள் மாநாடு: ஜெ. பங்கேற்பு
சென்னை:
டெல்லியில் நடைபெறவுள்ள முதல்வர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்கிறார்.
மாநிலங்களின் நிதிநலை குறித்து விவாதிப்பதற்காக அனைத்து மாநில முதல்வர்களின் கூட்டத்தை பிரதமர் வாஜ்பாய்கூட்டியுள்ளார். இக்கூட்டம் நாளை டெல்லியில் நடைபெறுகிறது.
இதில் ஜெயலலிதா கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக இன்று மாலை அவர் டெல்லிபுறப்பட்டுச் செல்கிறார். நாளை இரவே அவர் சென்னை திரும்புகிறார்.
நிதிச்சுமை மற்றும் பல்வேறு நிதிச் சிக்கல்களிலிருந்து மீள்வதற்காக ரூ.3,000 கோடி சிறப்பு நிதியை ஒதுக்குமாறுமத்திய அரசிடம், தமிழக அரசு கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிதியை உடனடியாக தமிழகத்திற்குஅளிக்குமாறு நாளைய முதல்வர்கள் மாநாட்டில் வாஜ்பாயிடம் ஜெயலலிதா வலியுறுத்துவார்.
இதுபோல பல மாநில அரசுகளும் நிதியுதவி கோரியிருப்பதால் தான் முதல்வர்கள் மாநாட்டிற்கு பிரதமர் ஏற்பாடுசெய்துள்ளார்.
இம்மாநாடு முடிந்த பின்னர் வாஜ்பாயை தனியாக சந்திக்கவுள்ள ஜெயலலிதா, காவிரியில் தமிழகத்திற்கு நீர்திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவை வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்வார்.
நாளை நடைபெறும் முதல்வர்கள் மாநாட்டில் கிருஷ்ணாவும் கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications