திருவண்ணாமலை கிரிவலம்: 20ம் தேதி சிறப்பு ரயில்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திருவண்ணாமலை பெளர்ணமி கிரிவல நிகழ்ச்சியையொட்டி வரும் 20ம் தேதி சென்னையிலிருந்து சிறப்பு ரயில்விடப்படுகிறது.
சென்னை தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து அன்று மாலை 3.30 மணிக்கு கிளம்பும் இந்த சிறப்பு ரயில் இரவு 9மணிக்கு திருவண்ணாமலை சென்று சேரும்.
மறு மார்க்கத்தில் அடுத்த நாள் மாலை 3.30 மணிக்கு இந்த ரயில் திருவண்ணாமலையிலிருந்து கிளம்பி இரவு 8.45மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
இரு மார்க்கத்திலும் செங்கல்பட்டு, மதுராந்தகம், மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்பும் ஆகிய ஊர்களில்இந்தச் சிறப்பு ரயில் நின்று செல்லும்.












Click it and Unblock the Notifications