காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி அமல்
ஸ்ரீநகர்:
இடைக்கால முதல்வராகப் பதவியில் நீடிக்க முடியாது என்று காஷ்மீர் முதல்வர் பாரூக் அப்துல்லா கூறியதைத்தொடர்ந்து அம்மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
காஷ்மீரில் சமீபத்தில் நடந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கு ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மையானஇடங்கள் கிடைக்கவில்லை. பாரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சி மட்டுமே அதிகமாக 28 இடங்களைப்பெற்றுள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியும் (22 இடங்கள்), மக்கள் ஜனநாயகக் கட்சியும் (16 இடங்கள்) வேறு சில இதரக்கட்சிகளுடனும் சுயேச்சைகளுடனும் இணைந்து ஆட்சி அமைக்க முன் வந்தன.
ஆனால் முதல்வர் பதவி யாருக்கு என்பதில் காங்கிரசுக்கும் மக்கள் ஜனநாயக் கட்சிக்கும் இடையே போட்டாபோட்டி ஏற்பட்டது. அந்தக் குழப்பம் இன்னும் நீடித்து வருகிறது.
இதற்கிடையே காஷ்மீரில் ஆட்சி அமைப்பதற்கு வரும் 21ம் தேதி வரை காலக்கெடுவை நீட்டித்த அம்மாநிலஆளுநர் சக்ஸேனா, அதுவரை பாரூக் அப்துல்லாவை முதல்வர் பதவியில் நீடிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
ஆனால் நேற்றுடன் பாரூக் அப்துல்லாவின் ஆறு ஆண்டு கால ஆட்சி முடிவடைந்ததைத் தொடர்ந்து, இடைக்காலமுதல்வராக நீடிக்க விரும்பவில்லை என்று அவர் கூறினார்.
டெல்லியிலிருந்து பிரதமர் வாஜ்பாயும், துணைப் பிரதமர் அத்வானியும் அவருக்கு போன் செய்து, 21ம் தேதி வரைமுதல்வராக நீடிக்குமாறு மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டனர். ஆனாலும் அதற்குப் பலன் இல்லை. இடைக்காலமுதல்வராக நீடிப்பதில் தனக்கு விருப்பமே இல்லை என்று பாரூக் அப்துல்லா திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார்.
இதையடுத்து காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படுவதாக நேற்று இரவு சுமார் 10.30 மணிக்கு ஆளுநர்அறிவித்தார்.
ஆனாலும் ஆட்சி அமைக்க விரும்பும் கட்சிகள் எப்போது வேண்டுமானாலும் முன் வந்து மெஜாரிட்டியை (44இடங்கள்) நிரூபித்து விட்டு காஷ்மீரில் ஆட்சியைத் தொடங்கலாம் என்றும் ஆளுநர் கூறியுள்ளார்.
-->












Click it and Unblock the Notifications