"கங்கை-காவிரி இணைப்புக்கு ரூ.2 கோடி தருவோம்"
சென்னை:
கங்கை-காவிரி இணைப்புத் திட்டம் அமல்படுத்தப்பட்டால் ரூ.2 கோடி தரத் தயார் என்று புதிய நீதிக் கட்சித்தலைவர் ஏ.சி. சண்முகம் தெரிவித்தார்.
கங்கை-காவிரி இணைப்புக்கு ரூ.1 கோடி தரத் தயார் என்று ரஜினிகாந்த் அதிரடியாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து தன் பங்குக்கு ரூ.2 கோடி தரத் தயார் என்று தற்போது சண்முகம் கூறியுள்ளார்.
அக்கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நடந்தது. கூட்டத்திற்குப் பிறகு சண்முகம் செய்தியாளர்களிடம்பேசுகையில்,
மாநிலங்களுக்கிடையிலான நதி நீர்ப்பிரச்சினைக்குத் தீர்வு காண கங்கை-காவிரி இணைப்பு ஒன்றே ஒரே வழி.
இந்தத் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தினால் எங்களது கட்சி சார்பில் ரூ.2 கோடி தரத் தயாராக உள்ளோம்என்று கூறினார் அவர்.
கங்கை-காவிரி திட்டத்திற்கு நிதியுதவி தருவதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை தான். நிதியுதவிதருபவர்களை மக்கள் பாராட்டியே ஆக வேண்டும். ஆனால் இத்திட்டத்தை காமெடியாக்கும் விதத்தில் யாரும்அறிவிப்பு வெளியிடக் கூடாது என்று தான் பொதுமக்கள் கருதுகிறார்கள்.












Click it and Unblock the Notifications