அரசு ஊழியர் ஸ்டிரைக்: சத்துணவு ஊழியர்களும் பங்கேற்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வரும் அக்டோபர் 23ம் தேதி முதல் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மேற்கொள்ளவுள்ள காலவரையற்றவேலைநிறுத்தப் போராட்டத்தில் சத்துணவு ஊழியர்களும் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
போனஸ் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வரும் 23ம்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் குதிக்கவுள்ளனர்.
இந்தப் போராட்டத்தில் தாங்களும் கலந்து கொள்ளப் போவதாக சத்துணவு ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
வரும் 23ம் தேதி சத்துணவுக் கூடங்களை மூடி விட்டு வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்பது என்று சங்கத்தலைவர் பழனிநாதன் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவானது.












Click it and Unblock the Notifications