மதமாற்ற தடை சட்டத்தை எதிர்த்து கிருஸ்தவர்கள், முஸ்லீம்கள் பேரணி
சென்னை:
தமிழக அரசின் மதமாற்றத் தடைச் சட்டத்தை எதிர்த்தும் அதை உடனடியாக வாபஸ் பெறக் கோரியும் மாநிலம்முழுவதும் சிறுபான்மை மதத்தினர் போராட்டம் நடத்தினர்.
கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக தமிழக அரசு சமீபத்தில் ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தது.அவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ.50,000 வரை அபராதமும் விதிக்க அச்சட்டம்வழி செய்கிறது.
இந்தத் தடைச் சட்டத்திற்கு சிறுபான்மை கிருஸ்தவ மற்றும் முஸ்லீம் மதத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்கள்மதங்களுக்கு எதிராக, குறிப்பாக தலித் மக்களுக்கு எதிராகத் தான் இந்தச் சட்டத்தை தமிழக அரசு கொண்டுவந்திருக்கிறது என்று அவர்கள் குற்றம் சாட்டினர்.
இந்நிலையில் கிருஸ்தவ மற்றும் முஸ்லீம் மதங்களைச் சேர்ந்த அமைப்பினர் இன்று மதமாற்றத் தடைச் சட்டத்தைஎதிர்த்து பேரணி மற்றும் போராட்டங்களைத் தமிழகம் முழுவதும் நடத்தினர்.
சென்னையில் "நடுவண் தொடரூர்தி நிலையம்ங (சென்ட்ரல் ரயில் நிலையம்) அருகே ஆர்க் பிஷப் எர்றா சண்முகம்மற்றும் தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஹைதர் அலி ஆகியோர் தலைமையில்பேரணி நடைபெற்றது.
தமிழக அரசின் மதமாற்றத் தடைச் சட்டத்தை எதிர்த்தும் அதை வாபஸ் பெறக் கோரியும் பேரணியில் கலந்துகொண்டவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள்.
பேரணியின் முடிவில் நடந்த ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து நிருபர்களிடம் எர்றா சண்முகமும் ஹைதர் அலியும்பேசுகையில்,
மதமாற்றத் தடைச் சட்டத்தை எதிர்க்கும் இப்போராட்டம் எங்களுடைய முதற்கட்ட நடவடிக்கை தான்.
தமிழக சட்டசபையின் மழைக்காலக் கூட்டத் தொடர் வரும் 24ம் தேதி தொடங்குகிறது. இதையடுத்து அன்றையதினமே நாங்கள் மாநிலம் முழுவதும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளோம்.
எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றும் வரையில் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துவோம். மேலும்நாங்கள் நடத்தும் பள்ளி மற்றும் கல்லூரிகளும் அன்று மூடப்பட்டிருக்கும் என்று அவர்கள் கூறினர்.
தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் இதே போல் பேரணிகளும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன. திருச்சியில்திமுக, மதிமுக, காங்கிரஸ் கட்சிகளின் தொண்டர்களும் கிருஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம்களும் கொண்ட சுமார் 3,000பேர் அம்மாநகர மேயர் சாருபாலா தொண்டமானுடன் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
பாண்டிச்சேரியிலும் கிருஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம்கள் இந்த மதமாற்றத் தடைச் சட்டத்தை எதிர்த்து போராட்டம்நடத்தினார்கள்.
இதற்கிடையே புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று கோயம்புத்தூரில் நிருபர்களிடம்பேசுகையில், மதமாற்றத்தில் ஈடுபடுபவர்களைச் சட்டம் கொண்டு தடுக்க முடியாது. வரும் டிசம்பர் 6ம் தேதி இந்தச்சட்டத்தை எதிர்த்து சென்னையில எங்கள் கட்சி சார்பில் பேரணி நடத்தப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications