சென்னை கிரிக்கெட் டெஸ்ட்: தொடரை வென்றது இந்தியா
சென்னை:
மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில்இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இதையடுத்து இந்த டெஸ்ட் தொடரையும்இந்தியா கைப்பற்றி விட்டது.
மேலும் 23 ஆண்டுகளுக்குப் பின்னர் சொந்த மண்ணில் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரைஇந்தியா கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மும்பையில் இம்மாதத் தொடக்கத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டில் இந்திய அணியினர் ஒரு இன்னிங்ஸ் மற்றம்117 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியினரைத் தோற்கடித்தனர்.
அதே உற்சாகத்துடன் கடந்த 17ம் தேதியும் சென்னை-சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய வீரர்கள் களமிறங்கினர்.
மேற்கு இந்தியத் தீவுகள் டாஸை வென்ற போதிலும், இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களான அனில்கும்ப்ளே மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோரின் "சுழல்களுக்கு" அந்நாட்டு அணியினர் மளமளவென்று வீழ்ந்தனர்.
ஆட்டத்தின் இரண்டாவது நாளில் மட்டும் மழை குறுக்கிட்டு ஆட்டம் தாமதமாகத் துவங்கச் செய்தது. ஆனாலும்சென்னை ரசிகர்களும் இந்திய வீரர்களுக்கு தொடர்ந்து உற்சாகத்தை அளித்துக் கொண்டே இருந்தனர்.
இதையடுத்து மேற்கு இந்தியத் தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 167 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 229ரன்களும் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்தியா முதல் இன்னிங்ஸில் 316 ரன்களை எடுத்திருந்ததால், 81 ரன்கள் என்ற எளிதான வெற்றி இலக்குடன்இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்தது.
துவக்க ஆட்டக்காரர்களான வீரேந்திர ஷேவாக்கும் சஞ்சய் பங்க்கரும் சேர்ந்தே இந்த ரன்களை அடித்துக் குவித்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இந்த இருவரின் விக்கெட்டுகளையும் இழந்து தான் இந்த டெஸ்ட் வெற்றியை இந்தியா பெறவேண்டியிருந்தது. ஆட்டத்தின் முடிவில் சச்சின் டெண்டுல்கர் 16 ரன்களும், ராகுல் டிராவிட் 6 ரன்களும் எடுத்துஆட்டமிழக்காமல் இருந்தனர்.
நான்காவது நாளிலேயே இந்த டெஸ்ட் முடிவடைந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளையும் வீ"ழ்த்தியஹர்பஜன் சிங், சென்னை டெஸ்ட் போட்டியின் ஆட்ட நாயனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இந்தியாவின் மூன்றாவது மற்றும் இறுதி கிரிக்கெட் டெஸ்ட் வரும் 30ம்தேதி கல்கத்தாவில் தொடங்குகிறது.
-->
-
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம்












Click it and Unblock the Notifications