சென்னை கிரிக்கெட் டெஸ்ட்: தொடரை வென்றது இந்தியா
சென்னை:
மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில்இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இதையடுத்து இந்த டெஸ்ட் தொடரையும்இந்தியா கைப்பற்றி விட்டது.
மேலும் 23 ஆண்டுகளுக்குப் பின்னர் சொந்த மண்ணில் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரைஇந்தியா கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மும்பையில் இம்மாதத் தொடக்கத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டில் இந்திய அணியினர் ஒரு இன்னிங்ஸ் மற்றம்117 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியினரைத் தோற்கடித்தனர்.
அதே உற்சாகத்துடன் கடந்த 17ம் தேதியும் சென்னை-சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய வீரர்கள் களமிறங்கினர்.
மேற்கு இந்தியத் தீவுகள் டாஸை வென்ற போதிலும், இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களான அனில்கும்ப்ளே மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோரின் "சுழல்களுக்கு" அந்நாட்டு அணியினர் மளமளவென்று வீழ்ந்தனர்.
ஆட்டத்தின் இரண்டாவது நாளில் மட்டும் மழை குறுக்கிட்டு ஆட்டம் தாமதமாகத் துவங்கச் செய்தது. ஆனாலும்சென்னை ரசிகர்களும் இந்திய வீரர்களுக்கு தொடர்ந்து உற்சாகத்தை அளித்துக் கொண்டே இருந்தனர்.
இதையடுத்து மேற்கு இந்தியத் தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 167 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 229ரன்களும் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்தியா முதல் இன்னிங்ஸில் 316 ரன்களை எடுத்திருந்ததால், 81 ரன்கள் என்ற எளிதான வெற்றி இலக்குடன்இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்தது.
துவக்க ஆட்டக்காரர்களான வீரேந்திர ஷேவாக்கும் சஞ்சய் பங்க்கரும் சேர்ந்தே இந்த ரன்களை அடித்துக் குவித்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இந்த இருவரின் விக்கெட்டுகளையும் இழந்து தான் இந்த டெஸ்ட் வெற்றியை இந்தியா பெறவேண்டியிருந்தது. ஆட்டத்தின் முடிவில் சச்சின் டெண்டுல்கர் 16 ரன்களும், ராகுல் டிராவிட் 6 ரன்களும் எடுத்துஆட்டமிழக்காமல் இருந்தனர்.
நான்காவது நாளிலேயே இந்த டெஸ்ட் முடிவடைந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளையும் வீ"ழ்த்தியஹர்பஜன் சிங், சென்னை டெஸ்ட் போட்டியின் ஆட்ட நாயனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இந்தியாவின் மூன்றாவது மற்றும் இறுதி கிரிக்கெட் டெஸ்ட் வரும் 30ம்தேதி கல்கத்தாவில் தொடங்குகிறது.
-->
-
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. குமரி, நீலகிரியில் இன்று விட்டு விளாசப் போகுது மழை! வானிலை மையம் ஜில் அப்டேட்! -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை.. சென்னையிலேயே பணியிடம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! விட்றாதீங்க -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்?












Click it and Unblock the Notifications