நாளை திமுக போராட்டம்: முன்னெச்சரிக்கையாக 3,617 தொண்டர்கள் கைது
சென்னை:
திமுக இளைஞர் அணி சார்பில் நாளை தமிழகம் முழுவதிலும் நடத்தவுள்ள போராட்டத்தையொட்டிமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3,617 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதிமுக அரசின் பல்வேறு நடவடிக்கைகளை கண்டித்து திமுக இளைஞர் அணி சார்பில் மாநிலம் தழுவியபோராட்டம் நடத்தப்படவுள்ளது.
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதிலும் திமுகவினர் கைது செய்யப்பட்டுவருகின்றனர். இதுவரை 3,617 திமுக தொண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் 350 பேரும், மதுரையில் 250 பேரும், தர்மபுரியில் 600 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைதானவர்களில் சில முன்னாள் அமைச்சர்களும் அடங்குவர்.
சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் திமுக இளைஞர் அணியின் செயலாளர் ஸ்டாலின் கலந்துகொள்கிறார்.
ஸ்டாலினின் அரசியல் செல்வாக்கை அறிந்து கொள்ளும் வகையில் தான் இந்தப் போராட்டத்திற்கு ஏற்பாடுசெய்யப்பட்டிருப்பதாக திமுக வட்டாரத்திலேயே பேச்சு அடிபடுகிறது.












Click it and Unblock the Notifications