சென்னையில் 30 வயது நபர் கொடூர கொலை
சென்னை:
சென்னை அருகே ஆலந்தூர் பகுதியில் கைகளும், ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் தலை, கால்கள் இல்லாமல்முண்டமாக ஒரு ஆணின் துண்டிக்கப்பட்ட உடலை போலீஸார் மீட்டுள்ளனர்.
ஆலந்தூர் பாலம் அருகே சாக்குப் பை ஒன்று மர்மாகக் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீஸார் விரைந்து சென்று அந்த சாக்குப் பையை எடுத்துப் பார்த்தனர். அதில் ஒருவரது கைகள்வெட்டப்பட்டு கிடந்தன.
அதே சமயத்தில், ஈக்காட்டுத் தாங்கல் பகுதியில் உள்ள பாலத்திற்குக் கீழே தலை மற்றும் கால்கள் இல்லாதநிலையில் முண்டமாக ஒருவரது உடல் கிடப்பதாகப் போலீஸாருக்குத் தகவல் வந்தது.
இதற்கிடையே கிண்டி அருகே நடு ரோட்டில் இரண்டு கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் பார்சல் செய்யப்பட்டுக்கிடந்தன.
இந்த உடலும், கைகளும், கால்களும் ஒரே நபருடையது தான் என்று கூறப்படுகிறது. அவருக்கு சுமார் 30 வயதுஇருக்கும் என்றும் தெரிய வந்துள்ளது.
இந்த நபர் யார் என்பது குறித்தும் எதற்காகக் கொலை செய்யப்பட்டார் என்பது குறித்தும் போலீஸார் தீவிரமாகவிசாரித்து வருகின்றனர்.
சில வருடங்களுக்கு முன்பு சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மாணவர் நாவரசுவும் இதே போலத் தான் துண்டுதுண்டாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications