தமாகாவில் தான் தொடர்ந்து நீடிப்போம்: அதிருப்தி எம்.எல்.ஏ.
மதுரை:
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தொடர்ந்து செயல்படும் என்றும் காங்கிரஸ் கட்சியுடன் இணைய மாட்டோம் என்றும்மதுரை மத்திய தொகுதி தமாகா எம்.எல்.ஏவான எம்.ஏ. ஹக்கீம் கூறினார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தேர்தல் கமிஷன் சமீபத்தில் முடக்கியது. இதையடுத்து கட்சியின் கொடி, சின்னம்,பெயர் போன்றவற்றை யாரும் பயன்படுத்தக் கூடாது என்று காங்கிரஸ் எம்.பி. ஞானதேசிகன் கூறியிருந்தார்.
ஆனால் காங்கிரஸுடன் சேராமல் தனித்து செயல்படும் 5 தமாகா எம்.எல்.ஏக்களும் தொடர்ந்து தமாகா என்றபெயரிலேயே இயங்க முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து மதுரையில் ஹக்கீம் கூறுகையில்,
காங்கிரஸுடன் இணைவது என்ற பேச்சுக்கே இடமில்லை. கொடி, பெயரை பயன்படுத்தக் கூடாது என்றுகாங்கிரஸார் கூற முடியாது.
தொடர்ந்து நாங்கள் தமாகா என்ற பெயரிலேயே செயல்படுவோம். எங்களுக்கு சட்டசபையில் தனி இடம் ஒதுக்கக்கோரி சபாநாயகர் காளிமுத்துவிடம் மனு கொடுக்கவுள்ளோம் என்றார் ஹக்கீம்.
இந்த ஐந்து அதிருப்தி எம்.எல்.ஏக்களும் எந்தக் கட்சியையும் சேராதவர்கள் என்றும் அவர்களுக்கு சட்டசபையில்தனி இடம் ஒதுக்கப்படும் என்றும் சமீபத்தில் காளிமுத்து கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.