For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

58 வயது... 58 தேங்காய்கள்... 90 நிமிடங்கள்...

By Staff
Google Oneindia Tamil News

கும்பகோணம்:

கும்பகோணத்தில் 58 வயதாகும் அரசு ஊழியர் ஒருவர் 90 நிமிடங்களில் தனது பல்லால் 58 தேங்காய்களை உரித்துசாதனை படைத்துள்ளார்.

கும்பகோணம் அரசு மருத்துவமனையில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் ராமையன். இவருக்கு 58வயதாகிறது. விரைவில் ஓய்வுப் பெறப் போகிறார்.

ஏதாவது சாதனை செய்து விட்டு மக்கள் மனதில் இடம் பெற்று விட்டு ஓய்வு பெறும் ஆர்வம் அவருக்கு ஏற்பட்டது.இதைத் தொடர்ந்து தன்னுடைய பற்களைக் கொண்டே தேங்காய்களை உரிக்க முடிவு செய்தார்.

இதையடுத்து கும்பகோணம் காவேரி நகரில் உள்ள செல்வ விநாயகர் கோவில் முன்பு 58 தேங்காய்களுடன்வந்தார்.

பின்னர் தனது பற்களால் தேங்காய்களை உரிக்கத் தொடங்கினார். அடுத்த 90 நிமிடங்களில் 58 தேங்காய்களையும்உரித்துத் தள்ளினார்.

கூடியிருந்தவர்கள் அனைவரும் உற்சாகக் குரல் எழுப்ப பின்னர் ராமையன் உரிக்கப்பட்ட தேங்காய்களை எடுத்துசிதறு தேங்காய் விட்டார்.

""இப்போது மன நிறைவுடன் ஓய்வு பெறுவேன்"" என்று பெருமிதத்துடன் பற்களை லேசாகக் கடித்துக் கொண்டேகூறினார் ராமையன்.

கரும்பைக் கடித்தாலே பலருக்கு பல் பறிபோகும் இந்தக் காலத்தில், 58 தேங்காய்களை பல்லிலேயே உரித்துத்தள்ளி 58 வயது ராமையனை அந்தப் பகுதி மக்கள் டைனோசரைப் பார்ப்பது போல ஆச்சரியத்துடன் பார்த்தனர்.அவருடைய சாதனையை வெகுவாகப் பாராட்டினர்.

110 மணி நேரம் முடி வெட்டும் சாதனை முயற்சியில் திண்டுக்கல் இளைஞர்

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X