வாஜ்பாய்க்கு தொண்டை வலி
டெல்லி:
பிரதமர் வாஜ்பாய்க்கு தொண்டை வலி ஏற்பட்டுள்ளதால் இன்று அவர் கலந்துகொள்ளவிருந்த நிகழ்ச்சிகளுக்குச்செல்வதை ரத்து செய்துவிட்டார்.
இன்று காலை இரண்டு நிகழ்ச்சிகளிலும் மாலை அமைச்சரவைக் கூட்டத்திலும் வாஜ்பாய் கலந்து கொள்வதாகஇருந்தது. 10வது ஐந்தாண்டுத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதற்காகத் தான் அமைச்சரவைக் கூட்டம் இன்றுநடைபெற இருந்தது.
ஆனால் அவருக்குக் கடந்த இரண்டு நாட்களாகக் கடும் தொண்டை வலி ஏற்பட்டுள்ளதால் பேசுவதற்குச்சிரமப்பட்டு வருகிறார்.
இதையடுத்து அந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை வாஜ்பாய் ரத்து செய்து விட்டார். இன்று நடைபெறவிருந்தஅமைச்சரவைக் கூட்டமும் ஒத்திவைக்கப்பட்டது.
கடும் தொண்டை வலி காரணமாக நேற்று தன்னுடைய லக்னோ பயணத்தைப் பாதியிலேயே முடித்துக் கொண்டபிரதமர் அங்கு நேற்று நடக்கவிருந்த பத்திரிக்கை நிருபர்கள் சந்திப்பை ரத்து செய்து விட்டார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
தொண்டை வலிக்கான சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறார் வாஜ்பாய்.
-->