லஞ்சம் வாங்கிய 2 போலீஸ் அதிகாரிகள் கைது
சேலம்:
விபத்தில் மாட்டிக் கொண்ட ஒரு பைக்கின் உரிமையாளரிடமிருந்து ரூ.2,000 வரை லஞ்சமாகப் பெற்ற 2 போலீஸ்அதிகாரிகளை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர்.
சேலத்தில் சமீபத்தில் ஏற்பட்ட ஒரு விபத்து காரணமாக ஒரு பைக்கை போலீசார் கைப்பற்றி போலீஸ் ஸ்டேஷனில்வைத்திருந்தனர்.
பைக்கை மீட்க வேண்டுமானால் அதன் உரிமையாளர் தங்களுக்கு ரூ.2,000 கொடுக்க வேண்டும் அந்த போலீஸ்நிலையத்தைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள் அவரிடம் கூறினர்.
இதையடுத்து அந்த பைக்கின் உரிமையாளர் நேராக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் சென்று இதுகுறித்துமுறையிட்டார்.
இதையடுத்து அந்தப் போலீஸ் அதிகாரிகளிடம் லஞ்சம் கொடுப்பது போல நடிக்குமாறு பைக்கின்உரிமையாளரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.
அவரும் உடனடியாக அந்த போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளிடம் ரூ.2,000பணத்தை லஞ்சமாகக் கொடுத்தார். அந்த அதிகாரிகளும் வாய் நிறையச் சிரிப்புடன் அந்தப் பணத்தைப் பெற்றுக்கொண்டனர்.
அப்போது அருகில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புப் போலீசார் அங்கு திடீரென்று வந்து லஞ்சம் வாங்கிய இரண்டுபோலீஸ் அதிகாரிகளையும் கைது செய்தனர். தாம் லஞ்சம் வாங்கியதைப் போலீஸ் அதிகாரிகளும் ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட இரண்டு போலீஸ் அதிகாரிகளும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர்சிறையில் அடைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications