பஸ், ரேஷன் ஊழியர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ்: ஜெ. அறிவிப்பு
சென்னை:
தமிழக போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கும் ரேஷன் ஊழியர்களுக்கும் இந்த ஆண்டு 8.33 சதவீதம் போனஸ்வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்ற அறிவித்துள்ளார்.
எப்போதும் வழங்கப்படும் 20 சதவீத போனசை வழங்க வேண்டும் என்று கோரி போக்குவரத்துக்கழக ஊழியர்கள்கடந்த ஆண்டு நவம்பர் மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இவர்கள் நடத்திய காலவரையற்ற போராட்டத்தினால் தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஸ்தம்பித்துப் போனது.சிறை நிரப்பும் போராட்டத்திலும் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்கள் கடந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையைசிறைகளில் தான் "கொண்டாடினர்".
சுமார் 16 நாட்களுக்கு தனியார் பஸ்கள் மற்றும் மினி பஸ்களைக் கொண்டே தமிழக அரசு போக்குவரத்தை சீர்செய்தது. போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்கப்படாது என்றும் 8.33 சதவீத போனஸ்தான் வழங்கப்படும் என்பதிலும் அரசு உறுதியாக இருந்தது.
கடைசியில் அரசு அளித்த 8.33 சதவீத போனஸ் தொகையையே பெற்றுக் கொண்டு போராட்டத்தை வாபஸ்பெற்றனர் போக்குவரத்துக்கழக ஊழியர்கள்.
இந்நிலையில் இந்த ஆண்டும் அவர்களுக்கு 8.33 சதவீத ானசை இன்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
போக்குவரத்துக்கழக மற்றும் ரேஷன் ஊழியர்களுக்கு இந்த ஆண்டு 8.33 சதவீத போனஸ் வழங்கப்படும் என்றுதமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.