16,000 திமுக தொண்டர்கள் இன்னும் சிறையில்...
சென்னை:
திமுக இளைஞரணி சார்பாக நடந்த போராட்டத்தையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைதுசெய்யப்பட்ட சுமார் 16,000 திமுக தொண்டர்களைப் போலீசார் இன்னும் விடுதலை செய்யவில்லை என்றுஅக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
தமிழக அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக இளைஞரணி சார்பில்போராட்டங்கள் நடைபெற்றன. சென்னையில் அதன் செயலாளர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டங்கள்நடத்தப்பட்டன.
இதையடுத்து தமிழகம் முழுவதும் ஸ்டாலின் உள்ளிட்ட 27,000 திமுக தொண்டர்கள் கைது செய்யப்பட்டதாகப்போலீசார் கூறினர். ஆனால் 64,000 தொண்டர்கள் வரை கைது செய்யப்பட்டதாக திமுக தரப்பு தெரிவித்தது.
இருப்பினும் ஸ்டாலின் உள்ளிட்ட கைது செய்யப்பட்ட அனைவருமே நேற்று மாலை விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், போராட்டத்திற்கு முந்தைய நாளிலேயே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 16,000 திமுகதொண்டர்களைப் போலீசார் கைது செய்ததாகவும் அவர்களை இன்னும் விடுவிக்கவில்லை என்றும் திமுக இன்றுகுற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக இன்று திமுக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
போராட்டம் நடத்திய திமுக தொண்டர்களைப் போலீசார் விடுதலை செய்து விட்டனர்.
ஆனாலும் போராட்டத்திலேயே கலந்து கொள்ளாத, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்யப்பட்டசுமார் 16,000 தொண்டர்களைப் போலீசார் இன்னும் விடுவிக்கவில்லை.
அவர்களை தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இல்லையென்றால் கட்சித் தலைமைவிரைவில் கூடி அவர்களை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications