மாறன் உடல்நிலை குறித்து தொலைபேசியில் விசாரித்தார் கலாம்
சென்னை:
மத்திய தொழில்துறை அமைச்சர் முரசொலி மாறனின் உடல்நிலை குறித்து ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம்தொலைபேசி மூலம் விசாரித்தார்.
மாறனின் இருதயத்தில் பொருத்தப்பட்ட செயற்கை வால்வில் பூஞ்சைத் தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து வேறுஒரு புதிய செயற்கை வால்வு பொருத்தப்பட்டது.
இருந்தாலும் அந்தப் பூஞ்சைத் தொற்று அவருடைய ரத்தத்திலும் கலந்து விட்டதால் மாறனின் நுரையீரல், கல்லீரல்மற்றும் சிறுநீரகம் ஆகியவை பாதிக்கப்பட்டன.
இதனால் அவர் உயிருக்குப் போராடி வருகிறார். அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்களும் மாறனைக் காப்பற்றதொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகத்தைச் சேர்ந்த இருதய நோய் நிபுணரான டாக்டர்பாண்டேயும் நேற்று சென்னை வந்து மாறனுக்குச் சிகிச்சை அளித்தார்.
இந்நிலையில் மாறனின் மனைவியான மல்லிகா மாறனிடம் தொலைபேசி மூலம் டாக்டர் கலாம் தொடர்பு கொண்டு,அவருடைய உடல்நிலை குறித்து விசாரித்தார்.
மேலும் மாறன் விரைவில் குணமடைய தான் பிரார்த்தனை செய்வதாகவும் மல்லிகாவிடம் டாக்டர் கலாம் கூறினார்.
இதற்கிடையே பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டசும் தொலைபேசி மூலம் திமுக தலைவரும்மாறனின் மாமாவுமான கருணாநிதியைத் தொடர்பு கொண்டு, மாறனின் உடல்நிலை குறித்து விசாரித்தார்.
இந்நிலையில் கருணாநிதி நேற்றும் அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்று மாறனின் உடல்நிலை குறித்துமருத்துவர்களிடம் விசாரித்தார்.












Click it and Unblock the Notifications