மூதாட்டியின் தலையை வெட்டி குளத்தில் வீசிய 2 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு மூதாட்டியைக் கொன்று தலையை வெட்டி குளத்தில் தூக்கி வீசிய 2 பேரைபோலீஸார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியைச் சேர்ந்தவர் பகவதி அம்மாள். இவர் டீக்கடை வைத்துள்ளார்.
இவரது பேரனுக்கும், ஜஸ்டின் ராஜ் உள்ளிட்ட சிலருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.
இந்த நிலையில், பகவதி அம்மாவின் பேரனைத் தாக்குதவற்காக ஜஸ்டின் ராஜும் அவரது நண்பரும் ஒரு இடத்தில்மறைந்து நின்றுள்ளனர். அதை பகவதி அம்மாள் பார்த்து விட்டு குரல் எழுப்பினார்.
இதையடுத்து அந்த இரண்டு பேரும், பகவதி அம்மாளின் கழுத்தை நெரித்துக் கொன்றனர். பின்னர் அவரதுதலையை வெட்டி அங்கிருந்த குளத்தில் வீசி விட்டுச் சென்றனர்.
போலீஸார் இருவரையும் வலை வீசித் தேடிப் பிடித்து கைது செய்து தக்கலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.












Click it and Unblock the Notifications