வங்கக் கடலில் புயல் சின்னம்
சென்னை:
வங்காள விரிகுடாவில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதைத் தொடர்ந்து தமிழகத்தில் அடுத்த 2நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் தென்மேற்குப் பகுதியிலும், ஆந்திராவின் தெற்கிலும் புயல் சின்னம் உருவாகியுள்ளது.
இந்தப் புயல் படிப்படியாக மேற்கு நோக்கி நகர்ந்து தெற்கு ஆந்திரா அல்லது வடக்கு தமிழகத்தில் கரையைக்கடக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புயல் காரணமாக தமிழகம், பாண்டிச்சேரி, தெற்கு ஆந்திரா ஆகிய பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் இடி,மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாக தமிழகத்தின் வட மாவட்டங்கள் முழுவதிலும் மிக பலத்த மழையும், மற்ற மாவட்டங்களில் ஓரளவுபலத்த மழையும் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழையும் முழு வீச்சில் தொடங்கி விடும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications