For Daily Alerts
Just In
தமிழகத்தில் அடுத்த ஆண்டில் 3 புதிய மருத்துவக் கல்லூரிகள்
திருச்சி:
தமிழகத்தில் அடுத்த கல்வியாண்டு முதல் 3 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படவுள்ளன.
திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் மருத்துவக் கல்லூரியில் நடந்த விழாவில் கலந்து கொண்ட தமிழக மருத்துவக்கல்வி இயக்குநர் டாக்டர் ரவீந்திரநாத் பின்னர் நிருபர்களிடம் பேசுகையில்,
தேனி, கன்னியாகுமரி மற்றும் வேலூர் ஆகிய இடங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படும்.
அடுத்த கல்வியாண்டு முதல் இவை செயல்படத் தொடங்கும்.
இதுதவிர தற்போதுள்ள மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான இடங்களும் அதிகரிக்கப்படும்என்றார் டாக்டர் ரவீந்திரநாத்.
Comments
Story first published: Wednesday, October 23, 2002, 5:30 [IST]