கொளத்தூர் மணி ஜாமீன் மனு: விசாரணை ஒத்திவைப்பு

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

பெரியார் திராவிட கழகத்தின் தலைவரான கொளத்தூர் மணியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை கர்நாடகஉயர் நீதிமன்றம் அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தது.

சந்தனக் கடத்தல் வீரப்பனால் கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பா கடத்தப்பட்டு 60 நாட்களாகி விட்டநிலையில், இன்னும் அவரை மீட்பதற்காக காட்டுக்குள் தூதரை அனுப்புவது குறித்து கர்நாடக அரசு முடிவுசெய்யவில்லை.

பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டுள்ள கொளத்தூர் மணியையும், ஐக்கிய ஜனதா தளக் கட்சியின்கொள்ளேகால் பிரிவுத் தலைவர் பொன்னாச்சி மகாதேவசாமியையும் தூதர்களாக அனுப்ப வேண்டும் என்றுசமீபத்தில் வீரப்பன் கேசட் அனுப்பியிருந்தான்.

ஆனால் கொளத்தூர் மணியை அனுப்புவதில் சட்ட சிக்கல்கள் இருப்பதால் அவரைத் தூதராக அனுப்ப கர்நாடகஅரசு மிகவும் யோசித்தது. ஒருவேளை ஜாமீன் கிடைத்தால் அனுப்பலாம் என்றும் முடிவு செய்தது.

மகாதேவசாமியை வைத்தே ரேடியோ மூலம் இந்தத் தகவல் வீரப்பனுக்கு கடந்த வாரம் அனுப்பப்பட்டது. ஆனால்இது தொடர்பாக வீரப்பனிடமிருந்து எந்த பதிலும் வராததால் நேற்றும் ஒருமுறை மகாதேவசாமியின் பேச்சுரேடியோவில் மறு ஒலிபரப்பு செய்யப்பட்டது.

இந்நிலையில் கொளத்தூர் மணி தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்குவந்தது.

கொளத்தூர் மணியின் வழக்கறிஞரான பிரகாஷ் இதன் விசாரணையை ஒரு வார காலத்திற்கு ஒத்திவைக்குமாறுநீதிமன்றத்திடம் கேட்டுக் கொண்டார்.

அவருடைய வேண்டுகோளை ஏற்று, நீதிபதி ராஜேந்திர பிரசாத்தும் கொளத்தூர் மணியின் ஜாமீன் மனு மீதானவிசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தார்.

இதற்கிடையே மற்றொரு வழக்கு தொடர்பாக மைசூர் நீதிமன்றத்தில் கொளத்தூர் மணி தாக்கல் செய்திருந்தஜாமீன் மனு மீதான விசாரணை நாளை நடைபெறுகிறது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+