"இவர் கிருஷ்ணாவா? இல்லை முஷாரப்பா?: கேட்கிறார் இல.கணேசன்
மதுரை:
காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் நடந்து கொள்வது போலவே காவிரிப்பிரச்சினையில் கர்நாடக முதல்வர் கிருஷ்ணா இரட்டைவேடம் போடுகிறார் என்று பாரதீய ஜனதாக் கட்சியின்அகில இந்திய செயலாளர் இல. கணேசன் கூறினார்.
இது தொடர்பாக மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
காவிரிப் பிரச்சினையில் இரட்டை வேடம் போட்டு வருகிறார் கிருஷ்ணா. மைசூர் பகுதிகளுக்கு பாதயாத்திரைபோகிறார். மறுபுறம் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில் தமிழகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார்என்கிறார்.
சுப்ரீம் கோர்ட் முன் வழக்கு இருக்கும் போது எப்படிப் பேச்சு வார்த்தை நடத்துவது? தண்ணீர் விட வேண்டும்என்று சுப்ரீம் கோர்ட் மிகத் தெளிவாக கூறி விட்டது. பிறகு எதற்கு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்?
கிருஷ்ணா போன்றவர்கள் தேர்தலில் நிற்கவே தடை விதிக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையே இவரைப்போன்ற முதல்வர்கள் புறக்கணிப்பது தவறான கருத்தை மக்கள் மனதில் பதித்து விடும்.
கிருஷ்ணாவை இந்தியாவிலேயே மிகவும் நாகரீகமான முதல்வர் என்று அத்தனை பேரும் கூறிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் தேசியக் கட்சியான காங்கிரஸ் கட்சியிலிருந்து வந்தவரான அவரதுசெயல்பாடுகளோ அதற்கு நேர்மாறாகத்தான் உள்ளன. காவிரிப் பிரச்சினையை முற்றிலும் அரசியலாக்கி விட்டதுகாங்கிரஸ் என்றார் கணேசன்.
-->












Click it and Unblock the Notifications