"வீரப்பனிடமிருந்து 4வது கேசட் வரவில்லை"

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

சந்தனக் கடத்தல் வீரப்பனிடமிருந்து 4வது கேசட் எதுவும் வரவில்லை என்று கர்நாடக உள்துறை அமைச்சர்மல்லிகார்ஜுன கார்கேயும் டி.ஜி.பி. மடியாளும் கூறினர்.

கடந்த 6ம் தேதி வீரப்பனிடமிருந்து 3வது கேசட் வந்தது. அவனால் கடத்தப்பட்ட கர்நாடக முன்னாள் அமைச்சர்நாகப்பாவின் வீட்டு வாசலில் இந்தக் கேசட் வைக்கப்பட்டிருந்தது.

பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெரியார் திராவிட இயக்கத் தலைவர் கொளத்தூர் மணி மற்றும்கொள்ளேகால் பகுதி ஐக்கிய ஜனதா தளத் தலைவர் பொன்னாச்சி மகாதேவசாமி ஆகியோரை தூதர்களாகஅனுப்ப வேண்டும் என்று அந்தக் கேசட்டில் வீரப்பன் கூறியிருந்தான்.

இந்நிலையில் வீரப்பனிடமிருந்து 4வது கேசட் வந்துள்ளதாக கொள்ளேகால் பகுதியில் செய்தி பரவியது.நாகப்பாவின் குடும்பத்தினரிடம் அந்தக் கேசட் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

ஆனால் அப்படி ஒரு கேசட் வரவில்லை என்று கார்கே நிருபர்களிடம் கூறினார். நாகப்பாவின் குடும்பத்தினர்மற்றும் டி.ஜி.பி. ஆகியோரிடம் இதுபற்றிக் கேட்டதாகவும் அப்படி ஒரு கேசட் வரவே இல்லை என்று அவர்கள்தெரிவித்ததாகவும் கார்கே தெரிவித்தார்.

வீரப்பனிடமிருந்து 4வது கேசட் வரவில்லை என்று டி.ஜி.பி. மடியாளும் நிருபர்களிடம் கூறினார். இது ஒரு வதந்திதான் என்றும் அவர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+