பெங்களூர் ஐடி.காம்: நாளை தொடங்கி வைக்கிறார் கலாம்
பெங்களூர்:
ஆசியாவின் மிகப் பெரிய தகவல் தொழில்நுட்பக் கண்காட்சியான பெங்களூர் ஐடி.காம் கண்காட்சியை ஜனாதிபதிடாக்டர் அப்துல் கலாம் நாளை தொடங்கி வைக்கிறார்.
கர்நாடக அரசும் சாப்ட்வேர் டெக்னாலஜி பார்க்ஸ் ஆப் இந்தியா நிறுவனமும் இணைந்து இந்தக் கண்காட்சியைநடத்துகின்றன.
இந்தக் கண்காட்சியில் 17 நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான கம்ப்யூட்டர் சாப்ட்வேர் நிறுவனங்கள்பங்கேற்கின்றன.
இந்த ஐந்து நாள் கண்காட்சியை உலகம் முழுவதிலுமிருந்து வரும் லட்சக்கணக்கான பார்வையாளர்கள் கண்டுகளிக்கவுள்ளனர்.
கடந்த ஆண்டு நடந்த இந்தக் கண்காட்சியை இந்தியா உள்பட 15 நாடுகளைச் சேர்ந்த 2.45 லட்சம் பேர்கண்டுகளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கண்காட்சியால் சுமார் 250 மில்லியன் டாலருக்கும் மேல் வர்த்தகம் நடைபெறும் என்றுஎதிர்பார்க்கப்படுவதாக கர்நாடக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் இனாம்தார் கூறினார்.
இந்தியாவின் 11 மாநில அரசுகளும் இதில் பங்கேற்க உள்ளன.
இதற்கிடையே பெங்களூர் ஐடி.காம் கண்காட்சியைத் துவக்கி வைத்த பிறகு, பேலஸ் கிரவுண்டுக்குச் செல்லும்டாக்டர் கலாம் அங்கு 600 பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இன்டர்நெட் குறித்த வகுப்புகளை நடத்தவுள்ளார்.
அதன் பிறகு "சாதாரண மனிதனுக்கும் தகவல் தொழில்நுட்பம்" என்ற தலைப்பிலான ஒரு மாநாட்டிலும் கலந்துகொள்கிறார் டாக்டர் கலாம். மொரீஷியஸ், இங்கிலாந்து நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்களும், ஆந்திர முதல்வர்சந்திரபாபு நாயுடு, டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் ஆகியோரும் இந்த மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.
-->