அணைக்கட்டை முற்றுகையிட முயலும் விவசாயிகள்
மாண்டியா:
காவிரியில் தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்து விடப்பட்டதைக் கண்டித்து போராட்டம் நடத்த நூற்றுக்கணக்கான விவசாயிகள்கிருஷ்ணராஜ சாகர் அணையை நோக்கி சென்ற வண்ணம் உள்ளனர்.
லாரிகள், டிராக்டர்கள், வேன்கள் என எல்லா வகையான போக்குவரத்தையும் பயன்படுத்தி அவர்கள் அணைக்கட்டுக்கு வந்துகொண்டுள்ளனர்.
அவர்களை போலீசார் வெகு தூரத்திலேயே தடுத்து நிறுத்தி வருகின்றனர். சில இடங்களில் அவர்களைக் கலைக்கபலப்பிரயோகத்தையும் போலீசார் பயன்படுத்தி வருகின்றனர்.
தண்ணீர் திறப்பை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தி சிறை செல்வார்கள் என விவசாயிகள் சங்கத்தின் தலைவர் மாடேகெளடா கூறியுள்ளார்.
உச்ச நீதிமன்றம் நிலைமையை தீவிரமாகக் கண்காணித்து வருவதால், அரசியல் கட்சிகள் இந்தப் போராட்டத்தில் இருந்து விலகிநிற்கின்றன. இதில் அரசியல் செய்த முதல்வருக்கே நீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததால் மற்ற கட்சிகள் ஆடிப் போயுள்ளன.
இதனால் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய அளவில் போராட்டம் எதுவும் வெடிக்கவில்லை. அதே போல மாநில அரசும்பாதுகாப்பைத் தீவிரப்படுத்தி அசம்பாவித சம்பவங்களைத் தவிர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
ஆனால், கடந்தமுறை விவசாயிகளைத் தூண்டிவிட்ட கிருஷ்ணா அரசு அவர்களை வைத்தே அணைக் கட்டை முற்றுகையிடவைத்து நீரை விடுவதை நிறுத்தியது. போலீசார் இந்த போராட்டக்காரர்களுக்கு பாதுகாப்பாக நின்று கொண்டிருந்தனர்.
இப்போது உச்ச நீதிமன்ற பயத்தால் தனது நிலையை கர்நாடகம் மாற்றிக் கொண்டுள்ளது.
-->












Click it and Unblock the Notifications