நெய்வேலி அனல் மின் நிலைய ஊழியர்கள் ஸ்டிரைக்
சென்னை:
கூடுதல் போனஸ் கோரி நெய்வேலி அனல் மின் நிலைய ஊழியர்கள் ஒரு நாள் வேலைநிறுத்தம் மேற்கொண்டனர்.
நெய்வேலி அனல் மின் நிலையத்தில் திமுக தொழிற்சங்கமான தொழிலாளர் முன்னேற்ற சங்கம் மட்டுமேநிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட சங்கமாக உள்ளது.
இந்த சங்கம் சமீபத்தில் தீபாவளி போனஸ் தொடர்பாக நிர்வாகத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. ஆனால்இந்த ஒப்பந்தத்தை பிற தொழிற்சங்கங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
தொழிலாளர் முன்னேற்ற சங்கத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும், கூடுதல் போனஸ் தரவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மற்ற தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தம்மேற்கொண்டனர்.
அதன்படி நேற்று இரவு 10 மணிக்கு வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியது. இன்று இரவு வரை இந்தப்போராட்டம் நீடிக்கிறது.
தொழிலாளர்கள் போராட்டத்தையடுத்து நெய்வேலி அனல் மின் நிலையத்தின் அனைத்து பகுதிகளிலும் பலத்தபாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications