தீபாவளிக்காக மாடுகளை விற்கும் தஞ்சை விவசாயிகள்
தஞ்சாவூர்:
தங்களிடம் உள்ள மாடுகளை விற்று தீபாவளியைக் கொண்டாடும் அவல நிலைக்கு தஞ்சாவூர் மாவட்டவிவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
"மாடு கட்டிப் போரடித்தால் மாளாது என்று சொல்லி, யானை கட்டிப் போரடித்த சோழ நாடு" என்னும்பெருமைக்குரிய தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகளிடம் இப்போது போரடிக்க பயிர்கள் இல்லை.
போரடிக்கத் தேவைப்படும் மாடுகளும் விற்பனைக்குத் தயாராகிவிட்டன.
குறுவை சாகுபடி முழுமையாக அடிபட்டு விட்டதால் எலி, நத்தை, நண்டு ஆகியவற்றை சாப்பிடும் நிலைக்குஏற்கனவே காவிரி டெல்டா விவசாயிகள் தள்ளப்பட்டிருந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் 20 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டிருந்தாலும் இன்னும் ஒரு மூடைநெல் கூட கொள்முதல் செய்யப்படவில்லை.
கர்நாடக அரசு காவிரியில் நீர் திறந்துவிட மறுத்ததைத் தொடர்ந்து குறுவை சாகுபடி முற்றிலும் பறிபோய்விட்டதால் விவசாயிகள் கடும் பாதிப்படைந்தனர். இதனால் தான் ஒரு மூடை நெல் கூட கொள்முதல்செய்யப்படவில்லை.
சாகுபடி இல்லாததால் நெல் பயிர்களிலிருந்து கிடைத்திருக்க வேண்டிய வைக்கோலும் விவசாயிகளுக்குக்கிடைக்காமல் போனது. இதனால் மாடுகளுக்கு விவசாயிகளால் வைக்கோலைக் கூட உணவாகக் கொடுக்கமுடியவில்லை.
இந்நிலையில் ஐப்பசி மாதம் பிறந்து இதோ தீபாவளியும் வந்து விட்டது. ஏற்கனவே வறுமையில் வாடித் தவித்துக்கொண்டிருக்கும் விவசாயிகள் தங்கள் மாடுகளை விற்றாவது தீபாவளியைக் கொண்டாட முடிவு செய்துள்ளனர்.
இதையடுத்து தஞ்சாவூர் மாட்டுச் சந்தையில் லட்சக்கணக்கான மாடுகள் விற்பனைக்காகக் குவிந்து வருகின்றன.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நடக்கும் இந்த மாட்டுச் சந்தை தான் தமிழகத்திலேயே 2வது பெரிய மாட்டுச்சந்தையாகும்.
மாவட்டம் முழுவதிலிருந்தும் மாடுகள் இங்கு விற்பனைக்காகக் கொண்டுவரப்படும்.
கடந்த சில வாரங்கள் வரை ஒவ்வொரு வாரமும் சுமார் 50,000 மாடுகள் விற்பனைக்கு வரும் நிலை மாறி, தற்போதுஒரு லட்சம் மாடுகள் வரை விற்பனைக்காகக் கொண்டுவரப்படுகின்றன.
திருமணமாகியுள்ள தங்கள் மகள்களுக்குத் தாய் வீட்டுத் தீபாவளி சீதனமாக மாப்பிள்ளை வீட்டாருக்குக் கொடுக்கவேண்டுமே?
அதற்காகத் தான் பெரும்பாலான விவசாயிகள் தங்கள் மாடுகளையே கண்ணீருடன் விற்று வருகின்றனர்.
கடுமையான வறுமையில் உழன்று கொண்டிருக்கும் இந்த விவசாயிகள் இனிமேல் இந்த மாடுகளைத் திரும்பவும்வாங்க முடியுமா என்பது வெறும் கேள்விக்குறி மட்டுமல்ல, சோகமான விஷயமும் கூட.